சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதியை காண சென்ற தமிழகம், ஆந்திரா, கேரளாவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 106 பேர், கூட்டநெரிசலில் சிக்கி பலியாயினர். லட்சக்கணக்கில் பக்தர்கள் திரண்டதால் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. சம்பவம் நடந்த இடம் வெளிச்சம் இல்லாத அடர்ந்த வனப்பகுதி என்பதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலின் முக்கிய நிகழ்ச்சியான மகரஜோதி தரிசனம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. ஜோதியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் ஐயப்பன் கோயிலில் திரண்டனர். இதனால், போலீசார் [...]


